இயற்கை வழி சாகுபடி முறை பூச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
பச்சைப் புரட்சியின் சாதனையாக ரசாயன நஞ்சுகளைப் பயன்படுத்தி பூச்சிகளைக் கொல்ல தொடங்கியதும் உணவு நஞ்சானது மட்டுமின்றி, பூச்சிகளும் சாகத் தயாராக இல்லை.
மூலிகை பூச்சி விரட்டி வேலை செய்யும் விதம் எப்படி?
மூலிகை பூச்சி விரட்டிகள் மூன்று வகையான இலைகளைக் கொண்டு தயாரிக்கப்டுகிறது. ஒன்று, தொட்டால் வாசனையடிக்கக் கூடிய செடிகள், இரண்டு தின்றால் கசக்கக் கூடிய செடிகள், ஒடித்தால் பால் வரக்கூடிய செடிகள்
எடுத்துக்காட்டாக
ஆடாதொடை, ஆடுதீண்டாபாளை, ஊமத்தை, எருக்கு, தும்பை, துளசி, அத்தி, சோற்றுக் கற்றாழை, பெரண்டை, பீநாரி, பப்பாளி, சீதா, புங்கன், நொச்சி, வேம்பு, தழுதாளை, காட்டாமணக்கு, வேலிப்பருத்தி, வரிக்குமுட்டி, உண்ணிமுள் செடி, நித்தியகல்யாணி, உரக்கொளறை (கிளைரிசிடியா). இவற்றில் அடையாளம் தெரியாதவை இருந்தால் கவலைப்பட தேவையில்லை. தேவை நான்கு ஐந்து செடிகள் மட்டுமே. அவசியம் நெய்வேலி காட்டாமணக்கு செடி பயன்படுத்த வேண்டும்.
ஆடாதொடை, ஆடுதீண்டாபாளை, ஊமத்தை, எருக்கு, தும்பை, துளசி, அத்தி, சோற்றுக் கற்றாழை, பெரண்டை, பீநாரி, பப்பாளி, சீதா, புங்கன், நொச்சி, வேம்பு, தழுதாளை, காட்டாமணக்கு, வேலிப்பருத்தி, வரிக்குமுட்டி, உண்ணிமுள் செடி, நித்தியகல்யாணி, உரக்கொளறை (கிளைரிசிடியா). இவற்றில் அடையாளம் தெரியாதவை இருந்தால் கவலைப்பட தேவையில்லை. தேவை நான்கு ஐந்து செடிகள் மட்டுமே. அவசியம் நெய்வேலி காட்டாமணக்கு செடி பயன்படுத்த வேண்டும்.
ஒரு சாக்கு இலைகளை கொண்டு வந்து உரலில் இடித்து மண் தொட்டி அல்லது சிமெண்ட் தொட்டியையும் பயன்படுத்தலாம். பானைக்குள் இருக்கும் மூலிகை சட்னி மூழ்கும் அளவுக்கு ஆடு அல்லது மாட்டுச் சிறுநீரை ஊற்றி நிரப்பவும்.
மேலே குறிப்பிட்ட கலவை பத்து நாட்களில் மூலிகைக் கரைசலில் இருந்து தாங்க முடியாத அளவுக்கு நெடி வரக்கூடும். பூச்சி விரட்டி தயாராகி விட்டதற்கு இதுவே அடையாளம். ஒரு லிட்டர் பூச்சி விரட்டியுடன் பத்து லிட்டர் தண்ணீர் கலந்து பயிர் மீது தெளிக்க வேண்டும்.
மூலிகை பூச்சி விரட்டி செயல்படும் விதம்.
பூச்சி விரட்டி பயிர்களின் வாசனையை மாற்றி விடுகிறது. இதனால் தாய்ப்பூச்சி பயிரின் மீது அமர்ந்து முட்டையிடுவது தவிர்க்கப்படுகிறது.
பூச்சி விரட்டி பயிர்களின் வாசனையை மாற்றி விடுகிறது. இதனால் தாய்ப்பூச்சி பயிரின் மீது அமர்ந்து முட்டையிடுவது தவிர்க்கப்படுகிறது.
எல்லா பூச்சிகளும் பயிர்களின் விரோதிகள் அல்ல. பூச்சிகளை உண்ணும் தட்டான், பொறிவண்டு, மூக்கு வண்டு, சிலந்தி, கண்ணாடி சிறகி போன்றவை இருக்கவே செய்கின்றன. இத்தகைய நல்ல பூச்சி நண்பர்களை அடையாளம் கண்டு வைத்திருப்பது மிகவும் அவசியம்.
பூச்சிகளை பார்த்தவுடன் நஞ்சு தெளிப்பது கூடாது.
நூறுக்கும் மேற்பட்ட பறவைகள் பயிர் செடிகளை உண்ணும் பூச்சிகளை பிடித்து உண்ணுகின்றன.
குச்சிகள் அல்லது தென்னை ஓலையின் அடிமட்டையைப் பயிர் நடுவே நட்டு வைத்தால் பறவைகள் அதில் வந்து அமர்ந்து பூச்சியை பிடித்து உண்ணும். சென்டிப் பூ போன்ற செடிகளை பயிர்களின் ஊடே நடவு செய்வதன் மூலம் தீய பூச்சியை விரட்டலாம். ஆமணக்கு, வெள்ளரி, தட்டை பயிறு போன்ற செடிகளை நிலத்தின் விளிம்பின் நான்கு திசையிலும் பயிர் செய்ய வேண்டும். இது பூச்சிகளைக் கவர்ந்து இழுத்து முக்கிய பயிர்களை காக்கிறது.
பூச்சிவிரட்டியை நமக்கு கிடைக்கும் பொருளை கொண்டு தயாரித்து கொள்ளலாம்
செலவில்லாமல்
No comments:
Post a Comment