Wednesday, November 25, 2015

சொத்து பணயம் இல்லாமல் ரூபாய் ஒரு கோடி வரை வங்கி கடன் பெரும் திட்டம்:


CGTMSE குறு, சிறு தொழில்களுக்கான கிரடிட் கேரண்டி பண்ட் திட்டம்:
குறு, சிறு தொழில்கள் தொடங்கும் தொழில்முனைவோருக்கு குறிப்பாக புதிய தொழில் துவங்கும் தொழில்முனைவோர் தங்களிடம் சிறப்பான தொழில் திட்டமாக இருந்தால் வங்கிகளில் ரூபாய் ஒரு கோடி வரை எந்த விதமான சொத்து பிணயமும் (Collateral Security) இல்லாமல் வங்கி கடன் வழங்கும் திட்டம்.
இத்திட்டத்தினை மத்திய அரசும், சிட்பியும் இணைந்து செயல்படுத்துகிறது. நீங்கள் புதிய தொழில்முனைவோரகவும் லாபகரமான தொழில் தேர்வு செய்யும் பட்சத்தில் அத்திட்டம் புதிய கண்டுபிடிப்பாக இருந்தாலும் வங்கிகள் அந்த திட்டத்திற்கு எந்தவித சொத்து பிணயமும், தனிநபர் ஜாமீனும் இல்லாமல் கடன் வழங்கும். இந்த கடன் காலகடன் (Term Loan) மற்றும் நடைமுறை மூலதன கடன் (Working Capital Loan) இரண்டுமாகவும் இருக்கலாம்.
இத்திட்டத்தில் தாங்கள் இணைய CGTMSE -யுடன் இணைய வேண்டும். முதலாண்டு வங்கி கடன் தொகையில் 1.5% கட்டணமாகவும் அடுத்த ஒவ்வொரு ஆண்டும் ௦.75% கட்டணமாகவும் கட்ட வேண்டும்.
ஒருவேளே தொழில் நலிவுறும் பட்சத்தில் CGTMSE வங்கிக்கு கீழ்க்கண்ட வகையில் பணத்தை திருப்பி செலுத்தும்.
5 லட்சம் வரை – 85%
5 முதல் 50 லட்சம் வரை - 80%
50 லட்சம் முதல் 1 கோடி வரை – 50%
என்ற முறையில் வங்கிகளுக்கு திரும்ப கொடுக்கும்.
இத்திட்டத்தில் ஒரு சில வங்கிகள் தவிர அனைத்து வங்கிகளும் சேரும்.
லாபம் தரக்கூடிய தெளிவான திட்டங்கள், புது விதமான தொழில்களுக்கும் மற்றும் புதிய தொழில் முனைவோரும் இத்திட்டத்தில் கடன் பெற வாய்ப்பு உள்ளது.
இதில் வங்கியின் மேலாளர் முடிவே இறுதியானது.
மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள இணைய முகவரி மூலம் அணுகவும்..
www.cgtmse.in Toll Free no. : 1800222659
இது கடன் திட்டம் அல்ல...தொழில் நடத்துவதற்கான திட்டமாகும்.
C.R. Business Solutions
1B,Professors Colony, Pudukottai Main Road,
Subramaniya Puram, Trichy 620020
Cell 9789737886, 9345104264,
Email : crbusinesssolutions2014@gmail.com

No comments: