Sunday, November 29, 2015

அக்னி அஸ்திரம்:

அக்னி அஸ்திரம்:
புகையிலை ½ கிலோ,பச்சை மிளகாய் ½ கிலோ,பூண்டு ½ கிலோ, வேப்ப இலை 5 கிலோ ஆகியவற்றை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.அரைத்த கலவையை 15லிட்டர் மாட்டு சிறுநீரில்(கோமியம்) நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். இதை 4 முறை நன்றாக கொதிக்க வைத்து பின்னர் 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டினால் அக்னி அஸ்திரம் தயார்.
காய்ப்புழு,தண்டு துளைப்பான்,கொள்ளை நோய் போன்றவற்றை கட்டுப்படுத்த இதை பயன்படுத்தலாம
‘‘பசு மாட்டுச் சிறுநீரை எத்தனை நாட்கள் வரை சேமிக்கலாம்?’’
‘‘இந்தத் தகவல், உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தலாம். ஆனால், அதுதான் உண்மை. பசுமாட்டுச் சிறுநீரை
100 ஆண்டுகள்கூட சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம். எந்த அளவுக்கு காலதாமதமாக பயன்படுத்துகிறோமோ... அந்த அளவுக்கு அதன் வீரியம் கூடும். ஆனால், பசுஞ்சாணத்தை எவ்வளவு விரைவாக முடியுமோ... அவ்வளவு விரைவாக பயன்படுத்திவிடவும். அதிகபட்சம் ஏழு நாட்களுக்குள் பயன்படுத்திவிடுங்கள். இதற்கு மேல் சென்றால், சாணத்தில் உள்ள நுண்ணுயிரிகளின் வளர்ச்சி குறையும். பின்பு நாம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது.’’
-ஜீரோபட்ஜெட் பிதாமகர் சுபாஷ் பாலேக்கர்...

No comments: